Sunday, 11 December 2016


 எண்களும் தொழில்களும்
இந்த உலகத்தில் பிறந்த நாம் நமக்காகவும் நம்மை சேர்ந்தவர்களுக்காகவும் ஏதேனும் ஒரு தொழில் செய்தோ அல்லது ஒரு அலுவலகத்தில் பணி புரிந்தோ அனுதினமும் உழைக்கிறோம். ஆனால் தான் செய்யும் வேலையில் ஆத்ம திருப்தி அடைந்தோர் ஒரு சிலரே. அதிலும் அதில் வெற்றி அடைந்தோர் மிக சிலரே. யார் வேண்டுமானாலும் எந்த வேலை அல்லது தொழிலையும் செய்யலாம். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அதில் வெற்றி பெற முடிகிறது.அதற்கு காரணம் நமக்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்யாததே.
இங்கேதான் எண் கணிதம் நம்மை வழி நடத்துகிறது. இதனை வாழ்வில் பின் பற்றினால் வெற்றி உறுதி.
இதன் ஒரு பகுதியாக 03-06-2001 ல் மாலை மலர் நாளிதழின் இணைப்பான "ஆரூடம்" இதழில் வெளியான என்னுடைய எண் கணித குறிப்பு கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். எண் கணிதத்தை பின் பற்றி வாழ்வில் வளமோடு வாழ்வோம்.
வாழ்க வளமுடன் !!! மஹா கணபதியே சரணம் !!!
அன்புடன்,
தளபதி நாகராஜ்.

Tuesday, 29 November 2016

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

வீடு கட்டும் போது முக்கியமாக கடை பிடிக்க வேண்டியவை:
1. ஈசானியம் குறைபாட்டுடன் இருக்க கூடாது.
2. ஈசானியம் குறைந்த மனையை வாங்கினால் அதை சரி
செய்துதான் வீட்டை கட்டவேண்டும்.
3. ஈசானியத்தில்தான் கிணறு அல்லது போர் தோண்ட
வேண்டும்.
4. வாஸ்து நாளில் வாஸ்து பூஜையுடன் ஈசானியத்தில்
இருந்து கடைக்கால் ஆரம்பிக்க வேண்டும்.
5. ஈசானியத்தில் குப்பைகளையோ வேண்டாத
பொருள்களையோ போட்டு வைக்க கூடாது.



அனைவருக்கும் காலை வணக்கம் . 

மஹா கணபதியே துணை !!!!

அன்புடன் ,

தளபதி நாகராஜ் .